பொதுவாக ஒரு திரையுலக பிரபலங்கள் திருமணம் செய்து கொள்வது என்பதில் பெரிய ஆச்சர்யம் இருக்காது. திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் எத்தனை காலம் சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதே பெரிய விஷயமாகும். அதில், சில பிரபலங்களின் குடும்பங்கள் இன்னும் கட்டுக்கோப்பாக வாழ்ந்து வருகின்றன.
இதை சொல்வதற்கு காரணம், நீண்ட நாட்களாக பேசு பொருளாக இருந்து வந்த நடிகர் நாகர்ஜுனின் மகன் நாக சைதன்யா – மருமகள் சமந்தாவின் விவகாரத்துதான்.
தமிழிலில் சிம்பு – திரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில்தான் சமந்தா – நாக சைதன்யா அறிமுகமாகிக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, ஜீவா – சமந்தா நடித்த நீதானே என் பொன்வசந்தம் படத்தின் ரீமேக்கிலும் இவர்களின் ரீல் காதல் தொடர்ந்தது. இதனால், சமந்தா – நாக சைதன்யாவுக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.
அதன்படி, கோவாவில் மிகவும் கோலாகலமாக நடந்த திருமணத்தில் 150 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 2017 அக்டோபர் 6ந் தேதி இந்து முறைப்படியும், 7ந் தேதி கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடந்தது. மிகவும் பிரம்மாண்டமாக நடந்த அவர்களது திருமண செலவு மட்டும் ரூ. 10 கோடியை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து வதந்தி குறித்த விவகாரம் தொடர்ந்து பேசும் பொருளாக இருந்து வந்தது. ஆனால், இது குறித்து மறுப்போ, ஆதரவோ தெரிவிக்காமல், இருவரும் அமைதியே காத்து வந்தனர். இதனால், விவாகரத்துக்கு சமந்தா ஜீவனாம்சம் கேட்டுள்ளார் என்றெல்லாம் கூறப்பட்டு வந்தது.
அதேவேளையில், இந்தியில் சமந்தா நடித்த தி பேமிலி மேன் 2 வெப் தொடருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால், அவருக்கு பாலிவுட் வாய்ப்புகளும் தேடி வந்தது. இதனால், அவர் மட்டும் மும்பை சென்று செட்டில் ஆக இருப்பதாகவும் பேச்சுக்கள் அடிபட்டன. அதேவேளையில், கடந்த சில நாட்களாக அவர் நடிக்கும் படங்களில் கிளாமரும், பெட்ரூம் காட்சிகளும் அதிகமாகவே இருந்து வருகிறது. இது நாக சைதன்யாவுக்கு பிடிக்கவில்லை என்று போலும்.
இதனிடையே, நாக சைதன்யாவுக்கு வேறு ஒரு நடிகையுடன் காதல் மலர்ந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே இவர்கள் இருவரும் பிரிந்ததாகவும் மற்றொரு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கிறது. அந்த நடிகை கூட மலையாளத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் பிரபலமானவர் என்று சொல்லப்படுகிறது.யாரென்று விவரம் இன்னும் வெளிவரவில்லை.