தமிழில் சபாஷ், பாளையத்து அம்மன் ஆகிய படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை திவ்யா உன்னி. இவருக்கு மார்க்கெட் இல்லாததால் சினிமா விட்டு விலகி விட்டார். அதுமட்டுமின்றி தமிழில் நல்ல நடிகையாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் திடீரென சினிமாவை விட்டு விலகி விட்டார்.
மேலும் இவர் 2002ம் ஆண்டு டாக்டர் சுதீர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. மேலும் இவர்களுக்கு அர்ஜுன், மீனாட்சி என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் இவர் 2016ம் ஆண்டு திவ்யா உன்னி தன் கணவரை பிரிந்து விட்டதாக ஒரு தகவலை வெளியிட்டார். இந்த நிலையில் திவ்யா உன்னி, அருண்குமார் என்பவரை சமீபத்தில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.