தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஆரம்ப காலத்திலிருந்து ஏராளமான நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து விட்டு என்ன ஆனார்கள் என்று தெரியாமல் போய்விடுவார்கள். அந்த வகையில் தமிழில் 2003ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான புதியகீதை என்ற திரைப்படத்தின் இரண்டாவது கதாநாயகியாக முதன் முதலில் நடித்தவர்தான் நடிகை அமிஷா படேல். இவர் 1975ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இவர் தனது 5 வயதிலேயே பரத நாட்டியத்தை கற்றுக் கொண்டார்.
மேலும் அவர் பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அவருடைய தந்தையின் பள்ளி பருவ நண்பர் ஒருவரின் மூலமாக கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதன் மூலம் 2000ம் ஆண்டில் வெளியான கஹோனா பியார் ஹாய் என்ற முதல் படத்திலேயே பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்கும் மிகப் பெரிய வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.
மேலும் அவரது கல்லூரி படிப்பிற்காக அவர் அமெரிக்கா செல்ல விரும்பியதால் அந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். அதன் பின்னர் தான் அந்தப் படத்தில் கரீனாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் அந்தப் படத்த்திலிருந்து பாதியிலேயே வி லகி விட்டார். அதனால் மீண்டும் அந்த வாய்ப்பு அமிஷா படேல்க்கே திரும்பவும் கிடைத்து விட்டது.
அந்தப் படத்திற்கு பின்னர் இவர் தெலுங்கு சினிமாவில் பவன் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பத்ரி என்ற பிளாக் பஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அந்த படம் தெலுங்கில் பெரும் வசூல் சாதனையை படைத்தது. கிட்டத்தட்ட 120 கோடியை வசூல் செய்தது. மேலும் இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மேலும் இவர் நடித்த படங்களில் ஒரு சில படங்களுக்கு சிறந்த நடிகை என்ற விருதையும் பெற்றுள்ளார்.
அதன் பிறகு தான் தமிழில் விஜய் நடித்த புதிய கீதை படத்தில் மட்டும் நடித்த இவர் அதன் பின்பு தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிக்கவி ல் லை. தற்போது இவருக்கு 45 வயதாகிறது. இன்று வரை பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்டார். மேலும் இவரது சமீபத்தைய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது…