தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சரத்குமார் அவர்கள் நடித்து வெளியான படமான மாயி படத்தின் மூலம் மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் நடிகை மின்னல் தீபா. மாயி படத்தில் இடம் பிடித்த காமெடி சீன் ஒன்றில் வடிவேல் பெண் பார்க்க செல்லும் போது வாம்மா மின்னல் என்ற அந்த ஒரு டயலாக் மூலம் பல மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் நடிகை மின்னல் தீபா.
இவர் மாயி படத்தில் நடித்த பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்க தொடங்கி தற்போது பல படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். மேலும் இவர் வெள்ளித் திரையில் கலக்கியதை தொடர்ந்து சின்னத்திரை சீரியல் தொடர்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்து வரும் சீரியல் யாரடி நீ மோகினி மூலம் தனது தேர்ந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.
மேலும் தற்போது இந்த லாக்டவுனில் பல சினிமா பிரபலங்களின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. அந்த வகையில் மின்னல் தீபா அவர்களுக்கு சுப்பிரமணி என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்கள் இருவரது திருமணம் அவர்களது வீட்டில் சிம்பிள் ஆக முடிந்தது. இந்நிலையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இந்த திருமணம் எளிமையாக முடிந்துள்ளது.
மேலும் தி டீரென நடந்த தனது திருமண புகைப்படங்களை அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதைக் கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருகிறார்கள். மேலும் இது இவருக்கு இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இவருக்கு 2013ஆம் ஆண்டு ரமேஷ் என்பவருடன் திருமணம் ஆகியுள்ளது. மேலும் ரமேஷ் மற்றும் தீபா அவர்களும் வி வாக ர த் து வாங்கி விட்டார்கள். இருவரும் பி ரி ந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.