தமிழ் சினிமாவில் நடிகர், நடிகைகளை தாண்டி குணச்சித்திர வேடங்களில் நடிப்பவர்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும். அந்த வகையில் மகாநதி, தேவர் மகன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் தான் எஸ்என் லெட்சுமி.
இவர் 11 வயதில் தனது பெற்றோரை இ ழ ந்தார். பெற்றோர்களை இ ழந்த லட்சுமி வாழ்க்கையில் மிகப் பெரும் க ஷ்டத்தை அ னுபவித்து உள்ளார். அதுமட்டுமில்லாமல் 3 தலைமுறைகளாக நடித்த நடிகை என்ற பெருமையும் அவருக்கு உண்டு.
மேலும் இவர் கிட்டத்தட்ட 1500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். எஸ்என் லெட்சுமி தமிழ் சினிமாவைப் பொறுத்த வரை சந்திரலேகா என்ற பிரம்மாண்ட படத்தில் குரூப் டான்ஸராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை முதலில் தொடங்கியுள்ளார்.
அதற்குப் பின்னர் நாகேஷ், கே பாலசந்தரிடம் அவரை அழைத்துச் சென்று சர்வர் சுந்தரம் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார். இந்த படத்திலிருந்து தான் இவருக்கு சினிமாவில் ஒரு அங்கீகாரம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த மகாநதி, தேவர் மகன், விருமாண்டி போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வந்தார்.
நாகேஷ், சிவாஜி போன்ற பிரபலங்களுடன் நடித்து அதற்குப் பின்னர் கமல்ஹாசனுடன் தேவர்மகன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் என்றும் நீங்கா இடம் பிடித்து விட்டார். தேவர்மகன் படத்தில் அவரது நடிப்பை பார்த்து கமலஹாசன் அவர் நடித்த அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கொடுக்க ஆரம்பித்தாராம்.
அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு தனி திறமை கொண்டிருந்த லெட்சுமி. சினிமா வாழ்க்கையை மட்டுமே நம்பி கடைசி வரை திருமணமே செய்து கொள்ளவில்லை. அதற்கு முக்கியமான காரணம் அவரின் அண்ணன் குழந்தைகளை பார்த்துக் கொண்டதும், முதிர்ந்த வயதில் அவர்கள் லட்சுமியை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டது தான் காரணமாம்.
இப்படி தனது வாழ்க்கையில் பல க ஷ்டங்களை அ னுபவித்து சாதித்தவர் தான் லட்சுமி. சரவணன் மீனாட்சி மற்றும் தென்றல் போன்ற சீரியலிலும் நடித்துள்ளார். இ றப்பதற்கு முன்னதாக இந்த சீரியலில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.