திரைத்துறையில் பாண்டியராஜன் ஒரு பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். இவர் நிறைய படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் ஆவார். இவர் நகைச்சுவை கதாப்பாத்திரத்திலும், கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்துள்ளார். இவர் நடிப்பைத் தவிர சில படங்களையும் இயக்கியுள்ளார். இவர் மிகவும் கஷ்டப்பட்டு திரையுலகிற்கு அறிமுகமாகி தற்போது மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்திருக்கிறார்.
நடிப்பதற்காகத்தான் திரை உலகிற்கு வந்தார். ஆனால் இவர் குள்ளமாக இருந்ததால் இவர் அந்த வாய்ப்பை இழந்து மிகவும் கஷ்டப்பட்டார். இவரின் உயரத்தைக் கண்டு யாரும் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கொடுக்கவில்லை. மேலும் இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். மிகவும் கஷ்டப்பட்டு விடாமுயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் முதலில் உதவி இயக்குனராக பணியாற்றி பின் கொஞ்சம் கொஞ்சமாக அவரின் படங்களை ஏற்றி அதன் பிறகு வெற்றிப் படங்களையும் கொடுக்க ஆரம்பித்தார்.
தற்போது பிரபலமாக இருக்கும் அதிகமான இயக்குனர், கதாநாயகர்கள், கதாநாயகிகள் என்று பலர் ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்டு தான் பிறகு முன்னேறி வந்துள்ளனர். கஷ்டப்படாமல் எதுவுமே கிடைக்காது என்பது உண்மையான ஒரு வார்த்தைதான். இவர் தன் வாழ்க்கையில் ஒருவேளை சோற்றுக்கே மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து தற்போது இந்த அளவு பிரபலம் அடைந்து இருக்கிறார். இதற்கெல்லாம் காரணம் இவரது விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் தான்.
இவர் சிறு வயதில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது இவர் மனதில் ஒரு பெரிய ஆசை தோன்றியது. அது என்னவென்றால் இவர் சாப்பிடும்போது வெள்ளித் தட்டில் சாப்பிட்டு, வெள்ளி டம்ளரில் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று ஒரு பேராசை இவருக்குள் இருந்திருக்கிறது. ஆனால் சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நிலையில் நமக்கு வெள்ளி தட்டு என்பது கனவில் கூட வாங்க முடியாது என்று எண்ணி மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார்.
இவரைக் குறித்து பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியதாவது, பாண்டியராஜனின் எப்போதும் வெள்ளித்தட்டில் தான் சாப்பிடுவார். நான் ஒரு நாள் ஏன் என்று கேட்டதற்கு, எனக்கு சிறு பிள்ளையிலிருந்து இப்படி ஒரு நீங்கா ஆசை இருந்தது. வெள்ளித் தட்டில் சாப்பிட வேண்டும் என்பது என்னுடைய மிகப் பெரிய கனவு. தற்போது பணம் இருக்கிறது எனவே அதை வாங்கி வெள்ளித் தட்டில் சாப்பிட்டு வருகிறேன் என்று கூறியிருக்கிறார். சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கஷ்டப்பட்டவர் தற்போது வெள்ளித் தட்டில் சாப்பிடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறார் பாண்டியராஜன் அவர்கள்.