நடிகை கா ஞ்சனா 1960 மற்றும் 70 களில் தமிழ்த் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக இருந்தவர். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து மக்கள் அனைவரையும் திறமையான நடிப்பால் கவர்ந்தார். அன்று இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இவர் தனது நடிப்பாலும், தனது பேச்சாலும், இவரின் அழகாலும் பெருமளவில் ரசிகர்கள் இவருக்கு குவிந்தனர். மேலும் இவரின் விடா முயற்சியும், இவரின் தன்னம்பிக்கையும், இவரின் நடிப்பும் தான் இவர் இந்த அளவுக்கு பிரபலம் ஆவதற்கு முக்கியமான காரணம் .
இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். 1963 ஆம் ஆண்டு வெளியான இயக்குனர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை என்ற திரைப்படம் அவர் அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படம்.
தற்போது இவருக்கு 79 வயது ஆகிறது. விமான பணிப் பெண்ணாக இருந்த என்னை இயக்குனர் ஸ்ரீதர் அவர் இயக்கிய ‘காதலிக்க நேரமில்லை’ படத்தில் கதாநாயகியாக நடிக்க வைத்தார். என்னை தற்போது வரை பலருக்கும் கா ஞ்சனாவாகத் தான் தெரியும். ஆனால் என்னுடைய உண்மையான பெயர் வசுந்தரா தேவி. அப்போது நடிகை வைஜெந்தி மாலாவின் தாயாரும் அதே பெயரில் நடித்துக் கொண்டு இருந்ததால் என்னுடைய பெயரை கா ஞ்சனா என ஸ்ரீதர் மாற்றி விட்டார்.
1964-ல் அந்த திரைப்படம் வெளியான பிறகு தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் எனக்கு பட வாய்ப்புகள் கு விந்தது. கிட்டத்தட்ட 46 ஆண்டுகள் ஓய்வே இல்லாமல் நடித்தேன். சம்பாதித்த பணத்தில் சென்னையில் உள்ள தியாகராய நகரில் சொத்துக்கள் வாங்கி போட்டு இருந்தேன். அந்த சொத்துகளை எனது உறவினர்கள் என்னை ஏ மாற்றி அ பகரித்துக் கொண்டனர். அவற்றை மீட்க கோர்ட்டு ,வழக்கு என்று பெற்றோருடன் அலைந்தேன்.
இழந்த சொத்துக்கள் மீண்டும் கிடைத்தால் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு எழுதி வைப்பதாக வேண்டிக் கொண்டிருந்தேன். மேலும், அந்த வ ழக்கில் தீர்ப்பு எனக்கு சாதகமாக வந்தது. நான் இ ழந்த சொத்துக்களை மீண்டும் அடைந்தேன். சொத்துக்கள் என்னுடைய கைக்கு வந்தது. அதே போல் நான் வேண்டிய படியே 80 கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையான் கோவிலுக்கு எழுதி வைத்து விட்டேன்.
மேலும் அப்போது இருந்து இப்போது வரை திருமணம் செய்யாமல் இருந்ததால் என் தங்கை தற்போது என்னைப் பார்த்துக் கொள்கிறாள். அவள் என் மீது மிகவும் அன்பாக இருக்கிறார். என்னை மிகவும் பாசத்துடன் நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்றும் கூறியிருக்கிறார்.