தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் ரசிகர்கள் மிகவும் வித்தியாசமான கதைகளைத்தான் எதிர்பார்க்கிறார்கள். தற்போது தமிழ் சினிமாவில் நிலவி வரும் திரைப்படங்கள் எடுக்கும் வகையை கேட்டால் ஒன்று காமெடி திரைப்படம், மற்றொன்று சண்டை திரைப்படம் அப்படி இல்லை என்றால் உண்மைக் கதையை தழுவிய திரைப்படம். அப்படியே இந்த மூன்றும் இல்லா விட்டால் பேய் படம் என்ற நிலையில்தான் திரைப்படத்தை ரசிகர்கள் பிரித்துப் பார்த்து வருகிறார்கள்
ஆனால் 1990, 1980, 1970களில் ஒரு திரைப்படம் என்று எடுத்துக் கொண்டால் அனைத்து வகைகளும் கலந்து இருக்கும். அதாவது மசாலா திரைப்படம் என்றால் அனைத்தும் கலந்த கலவையாகதான் இருக்கும். அப்படி காதல், ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தும் கலந்து எடுத்த திரைப்படம் ரட்சகன். இந்தத் திரைப்படம் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் முதன் முதலில் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை சுஷ்மிதாசென்.
தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான முதல் படமே மாபெரும் வெற்றி பெற்றது. இந்த திரைப்படத்திற்காகவே பல ரசிகர்கள் நாகர்ஜுனா மற்றும் சுஷ்மிதா சென் அவர்களுக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்தத் திரைப்படத்தில் நடித்ததைத் தொடர்ந்து இவர் 2001 ஆம் ஆண்டு சங்கர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த முதல்வன் எனும் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி சென்றார். அந்தப் பாடல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் பிரபலமானது.
அதற்கு அடுத்தபடியாக இவர் தமிழ் திரையுலகில் படங்கள் எதுவும் நடிக்கவில்லை. நடிகை சுஷ்மிதாசென் 1994 ஆம் ஆண்டு உலக அழகிக்கான பட்டத்தை வென்றார். அதற்கு முன்பாகவே இவர் ஹிந்தி திரையுலகில் நடிக்க ஆரம்பித்து விட்டார். மாடலிங் துறையில் இருந்த இவர் ஹிந்தி துறையிலும் முதன்மை கதாநாயகியாக வலம் வந்தார். இப்படி இருக்க நடிகை சுஷ்மிதாசென் 2000 ஆம் ஆண்டு ரெணீ எனும் பெண் குழந்தையை தத்து எடுத்தார்.
அந்தக் குழந்தையை பத்து வருடமாக வளர்த்து வந்த நிலையில். 2010ஆம் ஆண்டு அலிசா எனும் மூன்று மாத பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்பொழுது அந்த இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவர் மாடலிங் துறையில் உள்ள ரகுமான் சாவ்ல்ஸ் என்னும் மாடலிங் இளைஞரை காதலித்து வந்தார். அவர் இவரை விட பத்து வயது குறைவானவர்.
இருந்தாலும் இவர்கள் நீண்ட காலமாக காதலித்து ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். இப்படி இருக்க இவர்கள் இருவரும் அடிக்கடி அவர்கள் உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வார்கள். அப்படி இவர்கள் செய்து கொண்டிருக்கையில் 2018ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அந்த வகையில் தற்பொழுது இரண்டு மகன்கள் மற்றும் கணவருடன் ஒரே வீட்டில்தான் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.