தற்போது சீரியல் நடிகர்கள் பலர் சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் கலர்ஸ் தொலைக்காட்சியில் திருமணம் என்ற தொடர் மூலம் காதலர்களாக மாறியவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா ஆகிய இருவரும். இவர்கள் இருவருக்கும் கடந்த வருட இறுதியில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.
அதன் பிறகு சித்து ராஜா ராணி 2 தொடரில் பிஸியாக நடித்து வர, ஸ்ரேயா ஜீ தமிழில் ரஜினி என்ற புதிய தொடரில் நாயகியாக நடித்து வருகிறார். இவர்களும் புதிதாக ஒரு யூடியூப் பக்கம் திறந்து அதில் நிறைய வீடியோக்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.
அண்மையில் கூட ஒரு புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார்கள். அதன் முன் நின்று புகைப்படங்கள் எல்லாம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்கள். தற்போது அவர்களது வீட்டில் இன்னொரு விசேஷம் நடைபெற உள்ளது. அது என்னவென்றால் நடிகை ஸ்ரேயாவின் தங்கை பிரியங்காவிற்கு திருமணம் நடக்கவுள்ளது.
ஸ்ரேயா தனது தங்கையுடன் திருமண கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram