அஜித்துடன் விஸ்வாசம், விஜய்யுடன் மாஸ்டர் போன்ற முன்னணி நடிகர்களுடைய படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானவர் தான் நடிகை சுரேகா வாணி. தமிழை தாண்டி தெலுங்கிலும் பிஸியான நடிகையாக வலம் வரும் இவரது கணவர் அண்மையில் தான் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
இவருக்கு ஒரு மகள் உள்ளார், அவ்வப்போது தனது மகளுடன் நடனம் ஆடுவது, ரீல்ஸ் செய்வது போன்று இவரது வாழ்க்கையை ஜாலியாக ஓட்டி கொண்டிருக்கிறார். இந்நிலையில் தான் நடிகை சுரேகா வாணி தன்னை விட 10 வயது குறைந்தவரை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்தன.
இதுகுறித்து இந்த நடிகை பேசுகையில், தனக்கு இன்னொரு திருமணம் செய்துகொள்ள ஒரு யோசனையும் இல்லை என்றும் தற்போது வாழ்க்கையை மகிழ்ச்சியாக ஓட்டி கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதுபோன்ற வதந்திகளை இனி பரப்ப வேண்டாம் என்றும் கடும் கோபமாக தெரிவித்துள்ளார்.