ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற்றி சாப்பிடும் போது இதன் சுவையே தனி தான்.எந்த ஒரு காய்ச்சல் வந்தாலும் வீட்டில் பெரியவங்க, முதலில் ரச சாப்பாடு கொடுங்கப்பா என்று சொல்வார்கள். ஏன்னா… ரசத்தில் நோய்களை எதிர்ப்பு போராடும் சக்தி இருக்கிறது.
வெறும் சாதத்தில் மட்டும் சேர்த்து சாப்பிட்டால் போதாது. சூப் மாதிரியும் ரசத்தை நீங்கள் சாப்பிடலாம்.இந்த ரசத்தில் வேறு எந்த விதமான பருப்பு வகைகளும் சேர்க்காமல் செய்யக் கூடியது.மிளகு ரசம், லெமன் ரசம் மற்றும் கொள்ளு ரசம் ஆகும். இதில் தக்காளி ரசம் அதிகமாக செய்வதோடு உடலுக்கும் நல்ல மருந்தாகும்.ரசம் என்பது ஒரு எளிதான விரைவில் செய்யக்கூடிய ஆரோக்கியமான ரெசிபி ஆகும்.
இடுப்பு வலியைப் போக்கும் கண்டத்திப்பிலி என்பது வழக்கு. மழை அல்லது சீதோஷ்ண மாற்றங்கள், மிகுதியான வேலை போன்ற காரணங்களால் வரும் உடல் வலி, காய்ச்சல், தொண்டைக் கட்டு போன்ற அறிகுறிகளுக்கு இந்த ரசம் மிகவும் சிறந்த மருந்து.சரி வாருங்கள் இப்படி ரசம் வெச்சா சோறு பத்தாது வச்சு பாருங்க கேளே உள்ள வீடியோ மூலமாக தெளிவாக தெரிந்துகொண்டு அசத்துங்கள்.