இன்றைய காலக்கட்டத்தில் குழந்தையின்மை பிரச்சினை என்பது சமூகத்தில் ஏராளமானவர்களுக்கு காணப்படுகின்றது.இன்றைய சூழலும், உணவு பழக்கவழக்கங்களும், ஓய்வின்றிய இயந்திர வாழ்க்கை முறையும் இதற்கு காரணமாக கூட இருக்கலாம்.போக்ககுழந்தைகள் இல்லாத வீடு பாலைவனமாய் வெறிச் சோடியிருக்கும். எத்தனை செல்வம் இருந்தாலும் குழந்தைச் செல்வம் இல்லையென்றால் அந்த வாழ்க்கையில் ஒருவித வெறுமை இருந்துகொண்டே இருக்கும்.
அவ்வாழ்க்கை பூரணத்துவம் அடையாது. மேலும், குழந்தைச் செல்வத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம் சமூகத்தில், குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களும் சரி, ஆண்களும் சரி முகங்கொடுக்கும் சங்கடங்கள் எண்ணிலடங்கா! இந்தச் சங்கடங்களையும் கவலைகளையும் போக்கவே செயன்முறைக் கருத் தரிப்பு என்ற நவீன தொழில் நுட்பம் கண்டு பிடிக்கப்பட்டது.
இயற்கையான கருத்தரிப்புக்கும் செயன்முறைக் கருத்தரிப்புக்கும் வித்தியாசம் ஒன்று தான்! உடலுக்குள் நடைபெறும் கருமுட்டையும் உயிரணுவும் ஒன்றிணையும் நிகழ்வு, ஆய்வகத்தில் நடத்தப்படுகிறது.
இது தான் அந்த வித்தியாசம். இதயத்துக்கு வரும் இரத்த நாளங்களில் ஒன்று அடைபட்டு மாரடைப்பு ஏற்பட்டால், அதற்கு வேறொரு குழாயைப் பொருத்தி அதன் மூலம் இரத்தத்தை ஓடச் செய்கிறோமல்லவா? அதற்கு ஒப்பானதே இதுவும்!
குழந்தையின்மைக்கு சுமார் அறு பது சதவீதம் ஆண்களே காரணமா கிறார்கள் என்பது நிரூபணமான ஒன்று. உயிரணு எண்ணிக்கை குறைவு, உயிரணுவின் நீந்தும் தன்மை குறைவு, உயிரணுவின் அமைப்பில் குளறுபடி என்பனவே ஆண்களைப் பாதிக்கும் பிரதான குழந்தையின்மைக்கான காரணிகள்!
சரி வாருங்கள் குழந்தை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள் இதை பண்ணுங்கள் | 400 பேருக்கு குழந்தை பிறந்துள்ளது