அண்மைக்காலமாக இந்தியாவில் விளையும் பலாப்பழங்களுக்கு வெளிநாடுகளில் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.கொரோனா காரணமாக உலகளவில் இறைச்சி விற்பனை வெகுவாக சரிந்துள்ளது. அதே நேரம் முக்கனிகளில் ஒன்றான பலாவுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
குறிப்பாக பழுக்காத நிலையில் உள்ள பலா பன்றியின் இறைச்சி போல இருப்பதால் இதை வெளிநாட்டினர் விரும்பி உண்கின்றனராம். இதுதவிர கேக்குகள், பழச்சாறுகள், ஐஸ்கிரீம்கள் மற்றும் பல்வேறு வகையான உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.பழுக்காத போது, இது கறிகளில் சேர்க்கப்படுகிறது அல்லது வறுக்கப்படுகிறது. து ண்டு து ண்டாக வெ ட்டப்பட்டு வதக்கப்படுவதோடு, ப ன்றி இ றைச்சிக்கு நிகராகவும் மாறியுள்ளது.
மேலும் இது பீட்சா டாப்பிங்காகவும் பயன்படுத்தப்படுகிறது. பலாப்பழ மாவு தயாரிக்கும் பலாப்பழம் 365 நிறுவனத்தின் நிறுவனர் ஜேம்ஸ் ஜோசப் இதுகுறித்து கூறியதாவது,30 கிராம் பலாப்பழ மாவில் ஒரு கிராம் பெக்டின் உள்ளது. அது மூன்று ஆப்பிள்களுக்கு சமம். இறைச்சியை விரும்பாத பலர் பலாப்பழத்தை அதிகம் விரும்புகின்றனர்.
பலாப்பழமாவு கோதுமை மற்றும் அரிசி மாவுக்கு மாற்றாக பயன்படுத்தப்படலாம் அல்லது பர்கர் முதல் இட்லி போன்ற உள்ளூர் கிளாசிக் வரை எதையும் தயாரிக்கலாம்.நாங்கள் ஒரு ஊட்டச்சத்து பகுப்பாய்வு செய்தபோது, இரத்த ச ர்க்க ரையை கட்டுப்படுத்த விரும்பும் ஒரு சராசரி நபருக்கு அரிசி மற்றும் ரொட்டி ஆகியவற்றை விட பலாப்பழம் சிறந்தது என்று நாங்கள் கண்டோம்.
கோழி, பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி சாப்பிடுவதில் மக்கள் எ ச்சரி க்கையாக இருக்கின்றனர். அவர்களில் நிறைய பேர் ப லாப்பழத்திற்கு மாறி உள்ளனர் என கூறியுள்ளார்.