ஏ.டி.எம். என்றால் ஓட்டோமெடிக் டெலர் மெஷின் என்றுதான் எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு ‘அழுகிப்போன டொமேட்டோ’ என்று இன்னொரு அர்த்தம் இருக்கிறது என்பதை கோலி சோடா படம் பார்த்தவர்கள் புரிந்திருப்பார்கள். படத்தில் A.T.M. என்ற பாத்திரத்தில் சீதா நடித்திருந்தார். யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவராலும் பாராட்டுப் பெற்ற அவர் தற்போது சென்னையில் 12வது படித்து வருகிறார்.
முருகதாஸின் கத்தியில் ஒரு சீனில் வந்தவர் தற்போது விஜய் மில்டனின் ‘பத்து என்றதுக்குள்ள’ படத்தில் நடிகை சமந்தாவின் தங்கையாக நடித்து வருகிறார். சென்னை புறநகர் பகுதியான குன்றத்தூரில் அவரின் வீடு இருக்கிறது.
நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘கோலிசோதா’வில் சீதாவின் நடிப்பைப் பற்றி ஆர்வமாக இருந்ததை நம்மில் பலர் நினைவில் கொள்வோம். இப்போது மாட்டுக்கு நான் அடிமை படத்தில் ஹீரோயின் ஆகிவிட்டார். ராசன் என்ற புதுமுகம் ஹீரோ, சவுந்தர்யா என்பவர் இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். பி.கே.இளையகுமார் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது இது முழுநீள காமெடி படம். மாட்டை தெய்வமாக நினைக்கும் ஒருவருக்கு அந்த மாட்டால் ஒரு பிரச்னை வருகிறது.
அதிலிருந்து தன்னையும் மீட்டு மாட்டையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை. மாடு நல்லா இருந்தாத்தான் விவசாயம் நல்லா இருக்கும், விவசாயம் நல்லா இருந்தாத்தான் நாடு நல்லா இருக்கும் என்கிற கருத்தை வ.லி.யுறுத்தும் படம். பல வருடங்களுக்கு பிறகு மாடும் நடித்திருக்கிறது. என்கிறார் இயக்குனர் இளையகுமார்.
இவர் தனக்கு வாயிப்பு தர வந்த இயக்குனரையே காரிதுப்பி அனுப்பியுள்ளார். ஆம், இயக்குனர் விஜய் மில்டன் இவரை தனது படத்தில் நடிக்க வைக்க கேட்டு சென்றதை பற்றி கூறி இருக்கிறார்.அதனை பற்றி அவர் கூறியதாவது “முக்கிய கேரக்டரில் நடிக்கும் பசங்க எல்லாரும் ஈசியா கிடைச்சுட்டாங்க. பட், ஹீரோயினுக்கு ஃப்ரெண்டா வர கேரக்டருக்காக நிறையப் பேரை பார்த்தேன். யாரையும் பிடிக்கவில்லை.
அந்த நேரத்தில் பைக்கில் போயிட்டு இருந்தப்போ, சீதா பொண்ணு நடந்து போயிட்டு இருந்தது. எனக்கு டக்குனு தோணுச்சு, இந்தப் பொண்ணு படத்துக்கு கரெக்டா இருக்குனு. உடனே பைக்கில் அந்தப் பொண்ணை ஃபாலோ பண்ணிட்டு போனேன். வண்டியை அந்தப் பொண்ணு முன்னாடி நிறுத்தி, ”வணக்கம் மா… என் பேர் விஜய் மில்டன், உன் பேர் என்ன மா” அப்படினு கேட்டேன். உடனே அந்தப் பொண்ணு ”தூ”னு துப்பிட்டு போயிருச்சு.”.
மேலும் இவர் விஜய் மில்டனின் இயக்கத்திலேயே பத்து என்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் சமந்தாவிர்க்கு தோழியாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் காலேஜ் முடித்த கையோடு திரைப்படங்களுக்கு பாய் பாய் சொல்லிவிட்டு படித்ததற்கு வேலையினை தேடி கொண்டிருக்கிறார். மேலும் தனக்கு ஏதேனும் சினிமா வாய்ப்ப வந்தால் மட்டுமே நடித்து கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.